திருப்பதி மலையில் வாழும் ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் #ஏழுமலையான் என்று அழைக்கிறார்கள்.
ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஏழு மலைகள் உள்ளன. ஏழு மலைகளை உடையவரன் ஏழுமலையான் என்று அனைவரும் அன்புடன் அழைக்கின்றோம். அந்த ஏழு மலைகள்__
ஒன்றாம் மலை
“வேம்” என்றால் பாவம், “கட” என்றால் “நாசமடைதல்” எனப் பொருள். பாவங்களைப். போக்கும் மலை என்பதால் இந்த மலைக்கு #வேங்கடமலை என்று பெயர். இம்மலையில் வேங்கடவனாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.
இரண்டாம் மலை
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். அவதாரத்திற்காக வந்த ஆதிசேஷன் பெயரால் #சேஷமலை என்று அழைக்கப்படுகிறது.
மூன்றாம் மலை
வேதங்கள் அனைத்தும் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது #வேத_மலை என்று அழைக்கப்படுகிறது.
நான்காம் மலை
ஶ்ரீநிவாசப் பெருமாளை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலைகளை எடுத்து வந்தார். அதனால் இந்த மலை #கருட_மலை” எனப் பெயர் பெற்றது.
ஐந்தாம் மலை
விருஷபன் என்ற அசுரன், வேங்கடவனை வணங்கி மோட்சம் பெற்றதால் இம்மலைக்கு #விருஷப_மலை என பெயர் வந்தது.
ஆறாம் மலை
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரை பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை #அஞ்சன_மலை எனப்படுகிறது.
ஏழாம் மலை
ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்குமிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும், ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இந்த மலைக்கு #ஆனந்த_மலை என்று பெயர் வந்தது.
இந்த ஏழுமலைகளில் உறைபவர் என்பதால் திருப்பதி ஶ்ரீநிவாசனுக்கு #ஏழுமலையான் என்று பெயர் வந்தது.