ஆன்மீகவாதிகளும் புகழ் பெற்ற கோவில்களும் நிறைந்தது தமிழகம். இதில் ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. மனிதர்களின் பல்வேறு பிரசனைகளுக்கு தீர்வு காண பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களும் உண்டு. இதில் விஷேசம் மனிதன் பிறந்தது முதல் சதாபிஷேக விழா காணும் வரை அனைத்துக்குமான பிரசித்தி பெற்ற கோவில்கள் கும்பகோணத்தை சுற்றியுள்ளன. இது தமிழகம் மட்டுமல்ல. உலகில் வேறு எந்த நகரத்திற்கும் கிடைக்காத பெருமை ஆகும்.
1 புத்திர பாக்கியம் எனப்படும் கரு உருவாக – கருவளர்ச்சேரி.
- கரு பாதுகாத்து சுக பிரசவம் பெற – திருக்கருகாவூர்.
- நோயற்ற வாழ்வு பெறுவதற்கு
- வைத்தீஸ்வரன் கோயில்.
- ஞானம் பெற – சுவாமிமலை.
- கல்வி, கலைகள் வளர்ச்சிக்கு – கூத்தனூர்.
- எடுத்த காரியம் வெற்றி பெற மன தைரியம் கிட்ட – பட்டீஸ்வரம்.
- உயர் பதவி அடைய(வேலை )வேண்டி) – கும்பகோணம் பிரம்மன் கோயில்.
- செல்வம்,பெறுவதற்கு – ஒப்பிலியப்பன் கோயில்.
- கடன் நிவர்த்தி பெற – திருச்சேறை சரபரமேஸ்வரர்.
- இழந்த செல்வத்தை மீண்டும் பெற – திருவிடைமருதூர் (மகாலிங்க சுவாமி).
- பெண்கள் நற்சமயத்தில் ருதுஆவதற்கும், ருது பிரச்சனைகள் தீரவும் – கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில்(நவ கன்னிகை).
- திருமண தடைகள் நீங்க – திருமணஞ்சேரி.
- நல்ல கணவனை அடைய – -கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் (மங்களாம்பிகை).
- ஆதர்சன தம்பதி (கணவன் மனைவி ஒற்றுமை). — திருச்சத்திமுற்றம்.
- பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர – திருவலஞ்சுழி.
- பில்லி,சூனியம் செய்வினை கோளாறுகள் நீங்க – அய்யாவாடி ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி.
- கோர்ட்டு, வழக்குகளில் நியாய வெற்றி அடைய – திருபுவனம் சரபேஸ்வரர்.
- பாவங்கள் அகல – கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடல்.
- எம பயம் நீங்க – குளத்தில் நீராடல் ஸ்ரீ வாஞ்சியம்.
- ஆயுள் பெற – திருக்கடையூர்.