அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது.
தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர்
பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு
பாடுகிறேன் நமசிவய அகோர மாகும்.
(செய்யுள்.5)
என்று கூறுகிறார். அவையாவன:
மந்திரம் பலன்
- நங்-சிவயநம – விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும்.
- அங்-சிவயநம – இயல்பாகத் தேக நோய் தீரும்
- வங்-சிவயநம – யோகசித்தி காணலாகும்.
- உங்-சிவயநம – ஆயுள் விருத்தி
- ஓம்-அங்-சிவயநம – ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும்.
- கிலி-நமசிவய – உலக வசியம் உண்டாகும்.
- ஹிரீம்-நமசிவய – நினைத்தது நடக்கும்.
- ஐ-உம்-நமசிவய – புத்தி, வித்தை நல்கும்.
- கிலி-உம்-நமசிவய – பிறப்பின்மை நல்கும்.
- நமசிவய – அமுதம் கிடைக்கும்.
- நமசிவய-உங்-நமசிவய – நாட்டிலுள்ள வியாதிகள், சுரம் தீரும்.
- நமசிவய-சிங்-வங்-நமசிவய – அறுபத்துநான்கு பிறவிகள் தீரும்.
- நமசிவய-வங் – வெற்றி கிடைக்கும்.
- சவ்-உம்-சிவய – சந்தானம் உண்டாகும்.
- சிங்-றீம் (சிவய) – வேதாந்த ஞானி ஆவர்
- உங்-றீம்-சிவயநம – மோட்சம் கிட்டும்.
- அங்-நங்-நமசிவய – தேக சித்தி உண்டாகும்.
- அவ்-உம்-சிவயநம – கயிலை வாழ் குருவைக் காணலாம்.
- ஓம்-சிவயநம – இறப்பை வெல்லலாம்.
- லங்-றீ-றீ-உங்-நமசிவய – தானியங்கள் கொழிக்கும்.
- நமசிவய ஓம் – வாணிபம் செழிக்கும்.
- ஓம்-அங்-உங்-சிவயநம – சாத்விக குணம் உண்டாகும்.
- ஓம்-ஸ்ரீ-உம்-சிவயநம – தனவான்கள் வசியமாவர்.
- உங்-ஓம்-நமசிவய – சிரசின் ரோகம் நிற்கும் (தலைவலி).
- ஓம்-அங்-சிவயநம – நெருப்பினில் பிரவேசிக்கலாம்.
அகோர முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 12 லிருந்து 20 வரை அகத்தியர் கூறுகிறார். அவையாவன: - துங்-நமசிவய – எதிரியின் நண்பர்களுக்குள் பகை உண்டாகும்.
- ஓம்-கங்-சிவய – சக்தி அருள் உண்டாகும்.
- ஓம்-சிங்-சிவயநம – ஸ்தம்பனம் (நிலைகுத்தல்) என்கிற சித்தி உண்டாகும்.
- ஓம்-பங்-சிவயநம – பேசாத பிரம்ம அக்ஷரம் அறியப்படும்.
- ஓம்-யங்-சிவயநம – சங்கடங்கள் தீரும்.
- ஓம்-மாங்-சிவயநம – வருணன் மூலம் ஐஸ்வர்யம் உண்டாகும்.
- ஓம்-மங்-நமசிவய – கடல்களை வற்றச் செய்யும் ஆற்றல் உண்டாகும்.
- கெங்-ஓம்-நமசிவய – யாவரும் வசியமாவர்.
- ஓம்-மங்-யங்-சிவய – விஷங்கள் பறந்தோடும்.
- அங்-ரங்-ஓம் சிவய – கடலைத் தாண்டி வானத்தில் பறக்கலாம்.
- ஓம்-அங்-சிங்-சிவயநம – சுவர்க்க கன்னியரைக் காணலாம்.
- ஓம்-வங்-சிங்-சிவயநம – முக்குணத்தை வெல்லலாம்.
- ஹிரீம் நமசிவய – விஷம் முறியும்; காணாத காட்சி காணலாம்.
- ஐ-உம்-சிவயநம – நான்கு வேதங்களையும் ஆறு சாத்திரங்களையும் அறியலாம்.
- வங்-சிங்-ஓம்-சிவய – தேவர்கள் தரிசனம் கிடைக்கும்.
- சங்-சிவயநம – விஷத்தால் இறந்தவரை எழுப்பலாம்.
- ஓம்-துங்-சிவயநம – ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவை செய்யலாம்.
- ஹீ-வம்-ஹிரிம்-ஓம்-சிவயநம – பெரிய நிலப்பரப்புக்கு அதிபனாவான்.
- சிங்-நமசிவய – தென்னை மரத்தை வளைக்கலாம்.
- வங்-சிவயநம – மழையில் நனையாமல் செல்லலாம்.
- சிவய-ஓம்-ஸ்ரீயும் – மழையை நிறுத்தலாம்.
- கிலி-உம்-சிவ – ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
- ஓம்-கங்-சிவ்-உம்-சிவய – கடலின் மேல் ஓடலாம்.
- சங்-யவ்-சிமந – ஓடும் நீரை நிறுத்தி அதன்மேல் நடக்கலாம்.
- மங்-நங்-சிங்-சிவய – பிசாசுகளையும் ராட்சஸர்களையும் அடக்கலாம்.
வாம தேவத்தைச் சார்ந்த 25 மந்திரங்களில் ஒன்பது மட்டும் இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை வருமாறு: - ஓம்-புரோம்-சிவய – அமுதத்தைச் சுவைக்கலாம்.
- ஓம்-ஐ-உம்-சிவய – மோனத்தில் இருக்கும் முனிவர்களைத் தரிசிக்கலாம்.
- ஐ-உம்-ஸ்ரீ-சிவய – ககன விமானம் கண்முன் தோன்றுதல்.
- உங்-தெங்-ஓம்-சிவய – பஞ்சதரு வந்து பலன் தரும்.
- கங்-உங்-கிங்-நசி-ஓம் – காமதேனு வந்து பலன் தரும்.
- சங்-சிவய-நம – தேவர் அரங்கம் கண்முன் தோன்றும்.
- மங்-சிவ-ஓம்-நம – இச்சா சக்தி முன் தோன்றி அபயம் அளிப்பாள்.
- ஸ்ரீ-உம்-சிவய – விஷ்ணு அபயமளிப்பார்.
- சங்-ஸ்ரீ-உம்-அங்-சிவயநம – கயிலைவளநாதர் முன் தோன்றுவார்.
இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால், இந்த மந்திரங்கள் எல்லாம் அரிசி (அக்ஷதை) போன்றவை, பீஜமந்திரங்கள் நெல் போன்றவை. இந்த மந்திரங்களைச் சீரியதொரு குரு மூலம் கற்றுச் சரியாக உச்சரித்தல் வேண்டும். அவற்றைத் தவறாக உபயோகிக்கக் கூடாது. குருவழி கற்றால் தான் இந்தப் பீஜமந்திரங்கள் பலன்தரும்.