fbpx

பணம் வந்த வேகத்தில் விரயமாகிறதா?

எவ்வளவு சம்பாதித்தும் வீட்டில் பணம் தங்குவதில்லை என சிலர் புலம்புகிறார்கள். எதற்காக செலவு செய்கிறோம்? என்று தெரியாமல் பணம் பல வகையில் செலவாகிறது. வீட்டு வாஸ்து அமைப்பிற்கும், பண விரயம் ஆவதற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? என பார்ப்போம்.

தென்மேற்கு பகுதியும், பணமும் :

குடும்ப தலைவர் தென்மேற்கு பகுதி அறையை படுக்கையறையாக பயன்படுத்தாமல் இருப்பது.

வீட்டின் தென்மேற்கு பகுதி தெருப்பார்வை அல்லது தெருத்தாக்கம் இருப்பது.

தென்மேற்கு பகுதி வடகிழக்கு பகுதியை விட தாழ்வாக அமைவது.

தென்மேற்கில் உள்ள அறையில் மட்டுமே பணப்பெட்டியை வைக்க வேண்டும். பணத்தை தேக்கு மரப்பெட்டியில் வைப்பது மேலும் சிறப்பு. எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் தேக்கு மரம் என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத்தன்மை நம்மிடம் பணத்தை தங்கிட செய்யும்.

வடமேற்கு பகுதியும், பணமும் :

வீட்டின் வடமேற்கு பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் பணம் விரயமாகும் வாய்ப்புகள் இருக்கும்.

இந்த 8 பொருள் எவர் வீட்டில் இருந்தாலும், எட்டுத் திக்கில் இருந்தும் பண வரவு வந்து கொண்டே இருக்கும்.*

நேற்றோ இன்றோ இந்தப் பரிகாரம் நமக்காக சொல்லப்படவில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய முன்னோர்கள், முன்னோர்களுக்கு முன்பாக வாழ்ந்த ராஜாக்கள் இந்த பொருட்களை தங்களுடைய வீட்டிலும், தாங்கள் வாழ்ந்த அரண்மனையிலும், கஜானா பெட்டியில் வைத்து, பூஜித்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த 8 பொருட்கள், நம்முடைய வீட்டில் இருந்தால், எட்டாக்கனியை கூட எட்டிப்பிடிக்க முடியும் என்று சொல்கிறது சில நூல் குறிப்புகள். சாதிக்க முடியாததை கூட சாதித்துக் காட்டும் சக்தி இந்த வாசனை பொருட்களுக்கு உள்ளது.

இன்றைய சூழ்நிலையில் நம் கைகளுக்கு எட்டாத இடத்தில் இருப்பது பணம் ஒன்று மட்டும்தான். எவ்வளவுதான் நம்முடைய வருமானம் உயர்ந்து கொண்டே போனாலும், அந்த வருமானத்திற்கு ஏற்ப செலவுகளும் உயர்ந்து கொண்டே இருக்கும். ஒரு மனிதனுக்கு மட்டும் எப்போதுமே பணத்தேவையை திருப்தி படுத்தவே முடியாது. எவ்வளவு பொன் பொருள் சொத்து சேர்ந்தாலும், அது அவனுக்கு பற்றாக்குறையில் தான் இருக்கும். ஆக, போதும் போதும் என்ற அளவிற்கு பொன் பொருளை சேர்ப்பது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான்.

வரக்கூடிய வருமானத்தை வைத்துக்கொண்டு, சரியான முறையில் செலவை கட்டுப்படுத்திக் கொண்டு, தன்னுடைய வாழ்க்கையை கடன் வாங்காமல் நடத்திச் செல்லும் அளவிற்கு ஒருவருக்கு சக்தி இருந்தால் அவர்கள் நிச்சயம் பணக்காரர்கள் தான். இது நம்மில் பல பேருக்கு புரிவதே கிடையாது. சரி, தேடல் இருந்தால் தானே மனிதர்கள். உங்களுக்கும் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளதா? நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். உங்களுடைய பணத்தேவையை பூர்த்தி செய்யப் போகும் அந்த எட்டு பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்வோமா?

திரவிய பட்டை, வெட்டிவேர், அகில்கட்டை, மஞ்சள் கிழங்கு, கோரோசனை, கஸ்தூரி பொடி, ஜாதிபத்திரி, ஜவ்வாது, இந்த பொருட்கள் அனைத்துமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். கடைகளில் கேட்டால் 50 கிராம் அளவு முதல் இந்த பொருட்களை கொடுப்பார்கள். இவை அனைத்தையும் வாங்கி, இதில் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் எடுத்து ஒரு மஞ்சள் துணியில் மொத்தமாக வைத்து மூட்டை கட்டி விடவேண்டும். 50 கிராமையும் மொத்தமாக வைத்துவிடாதீர்கள். எல்லாவற்றிலிருந்தும் ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் வைத்தால் மட்டும் போதும்.

அந்த முடிச்சை மஞ்சள் நூலால், மூட்டையாக கட்டி விடுங்கள். இதை பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். கல்லாப் பெட்டியிலும் வைத்துக் கொள்ளலாம். வாரத்திற்கு ஒரு முறை இந்த முடிச்சுக்கு கட்டாயம் தூபம் காட்ட மறந்துவிடாதீர்கள். தூபம் காட்டும் போது இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு கட்டாயம் இரட்டிப்பு பலன் கிடைக்கும். உங்களுக்கான அந்த மந்திரம் இதோ!

மந்திரம்

ஓம் ஐஸ்வர்ய தேவத்தா தன மாதா யோக ஸ்வதா
இரட்சகி பரிபூரண அனூகிரக தாதர வாவர சுவாஹா

இந்த மந்திரத்தை உச்சரிக்க தெரிந்தவர்கள் உச்சரித்து தூபம் காட்டலாம். மந்திரத்தை உச்சரிக்க தெரியவில்லை என்றால், பரவாயில்லை! சாதாரணமாக தூபம் காட்டி விட்டு, மனதார வீட்டில் சுபிட்சம் நிலவ வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் மட்டும் கூட போதும். பணம் கட்டாயம் சேமிப்பில் தங்கும்.

####₹###₹

💥வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கனுமா? இந்த 18 விடயங்களை அவசியம் பின்பற்றுங்கள்!!💥

🌷வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். இதற்கு சந்தோசத்தை தாண்டி பொருளாதாரம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.என்ன தான் கடினமாக உழைத்தாலும் கையில் ஒரு பைசா நிக்கமாட்டீங்குது தொடர்ந்து எதாவது செலவு வந்துட்டேயிருக்கு என்று சொல்பவர்கள் இதனை முயற்சித்துப் பாருங்கள்….. நல்ல மாற்றங்களை உணர்வீர்கள்.

(1)வண்ணம்:
பணம் கைமாறும் நேரங்களில், அடர் நிறமாக இல்லாமல் லைட் கலர்ஸ் ஆடைகளை அணிந்து செல்லுங்கள் அல்லது அந்த நிறத்தில் ஒரு கைகுட்டையாவது கைகளில் வைத்திருங்கள்.

(2)தூக்கம்:
எப்போதும் மேற்கு திசையில் தலை வைத்து படுப்பதையே வழக்கமாக கொண்டிருங்கள். வடக்கு நோக்கி தலை வைத்து படுப்பதை தவிர்த்திடுங்கள். இத்திசையில் படுத்தால் அதிக சோம்பல் குடிகொள்ளும்.

(3)பூஜையறை:
நமது வீட்டு பூஜை அறையில் இரண்டு கடவுள் சிலைகளை எதிரெதிரே வைக்கக் கூடாது. ஏனெனில் இதனால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்துவிடும். அதே போல உடைந்த சாமி சிலைகள் அல்லது கடவுளின் கிழிந்த போட்டோக்கள் இது போன்று வீட்டினுள் வைத்திருக்கக் கூடாது.

(4)கடிகாரம்:
கடிகாரத்தை கதவுகளுக்கு மேலே, வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றில் மாட்டக் கூடாது. ஏனெனில் தெற்கு எமதர்மராஜாவின் திசையாகும். கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு (சிறப்பு) திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.

(5) தரித்திரம்:
தலைமுடியில் இருந்து வழியும் வியர்வை, துணியை அலசிய பின்னர் உதிரும் தண்ணீர், துடைப்பத்தின் புழுதி, முற்றத்தின் காற்று முதலியவை உடலில் பட்டால் தரித்திரம் பெருகும்.

(6)குபேரன் ஊறுகாய் பிரியர் :
செல்வத்தின் அதிபதியான குபேரன் ஊறுகாய் பிரியர். அதனால் வீட்டில் பல வகையான ஊறுகாய்கள் இருந்தால் அங்கே குபேரன் வாசம் செய்வார் என்பது நம்பிக்கை.

(7)குப்பை:
மூன்று நாட்களுக்கு மேல் குப்பையை சேர்த்து வைக்க கூடாது. ஒரே ஆடையை அடிக்கடி அணிந்தாலும் செல்வ வளம் குறைந்திடும். உடுத்திய துணியை வீட்டின் கதவுகளில் தொங்கவிடக்கூடாது.

(8)கண் திருஷ்டி:
வாழை பூவை வீடுகளின் முன்பு, அல்லது வியாபார இடங்களின் முன்பு கட்டி வைத்து வாரம் ஒரு முறை மாற்றி வர கண் திருஷ்டி அகன்று வியாபாரம் விருத்தி அடையும். இது அனைவரின் பார்வை படும்படி இருக்க வேண்டும்.

(9)கண்ணாடி:
வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருக்க வேண்டும். அதேபோல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேல் கண்ணாடி இருக்க வேண்டும்.

(10)லட்சுமி கடாட்சம்:
பால்,தேன், தாமரை, தானியக்கதிர், நாணயங்கள் இவை லட்சுமியின் அடையாளங்கள். குறிப்பாக வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்கள் வைத்திருந்தால் செல்வம் செழிக்கும். இதனை வியாபாரம் செய்யும் இடங்களில் வைத்திருந்தால் தொழிலுள்ள தடை நீங்க லாபம் கிடைக்கும்.

(11)ஐந்து முக விளக்கு:
வெள்ளிக்கிழமை மாலையில் தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு அதன் மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வழிபட்டால் அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

(12)செடிகள்:
வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல. வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வ வரவை, வசீகர சக்தியைப் பாதிக்கும். வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய், பிசாசு போன்ற துர் சக்திகளை ஈர்க்கும். இது பூமி தோஷத்தை உண்டாக்கும். அதே போல வீட்டிற்குள் முட் செடிகளும் இருக்க கூடாது.

(13)பணப்பெட்டி:
பணப்பெட்டியில் மல்லிகைபூ, ஏலக்காய், பச்சைகற்பூரம், சந்தனம், வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமைகளில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும்.

(14)முன் வாசல்:
வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது. இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்துவதுடன் அதிர்ஷ்டத்தையும் தடுத்திடும்.

(15)சுடுகாடு:
சுடுகாட்டுக்கு அருகில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது. இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும். வறுமை, அவமானம் உண்டாக்கும். பேய், பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.

(16)விளக்கு:
வீட்டில் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.

(17)சுத்தம்:
வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல்உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.

(18)புதுப்பணக்காரன்:
இதையெல்லாம் கடைபிடித்து செல்வ வளம் பெருகியதும், புதுப் பணக்காரன் திமிரைக் காட்டிடக் கூடாது. கிடைத்த செல்வங்கள் நிலைக்க வேண்டும் என்று விரும்பினால், ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடலாம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram