fbpx

அன்றாடம் சொல்ல வேண்டிய போற்றிகள்

  1. காலையில் துயில் எழும் போது :-

அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி

  1. குளிக்கும் போது :-

சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

  1. கோபுர தரிசனம் காணும் போது :-

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  1. வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது :-

காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா எந்தனக்கு அருளாய் போற்றி

  1. நண்பரைக் காணும் போது :-

தோழா போற்றி துணைவா போற்றி

  1. கடை திறக்கும் போது :-

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

  1. நிலத்தில் அமரும் போது :-

பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

  1. நீர் அருந்தும் போது :-

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

  1. அடுப்பு பற்ற வைக்கும் போது:-

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

  1. உணவு உண்ணும் போது :-

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

  1. மனதில் அச்சம் ஏற்படும் போது :-

அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி

  1. உறங்கும் போது :-

ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி

எல்லாம் சிவமயம்

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram