fbpx

ஐஸ்வர்யம் பெருக வழிமுறைகள்:-

  1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்க்கவும்.
  2. குளித்தபின்பு முதுகை முதலில் துடைக்கவும். பின்பு, முகத்தை துடைக்கவும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.
  3. பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது.
  4. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டு கொண்டு தான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.
  5. இரவில் தயிர் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
  6. பூஜை அறையில் பழனியாண்டவர் படம் வைப்பதாக இருந்தால், ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருப்பின் அதை எடுத்து விட்டு ராஜா கை வைத்து இருப்பது போல் வைக்கவும்.
  7. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்கவும்.
  8. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
  9. படத்திற்கும், கல்லாபெட்டிக்கும் அல்லது பீரோவிற்கும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.
  10. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
  11. லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும்.
  12. வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகர் படங்களை மாட்டவும்.அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும். அதை விடுத்து அரக்கர் படமோ. விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமோவெல்லாம் மாட்டக் கூடாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram